எளியவர்க்கு சொந்தம் இந்த

எளியவர்க்கு சொந்தம் இந்த உலகம் என்று - நம்
இயேசு சொன்ன நல்ல காலம் வருமோ? என்று

அனுபல்லவி

ஒளியிழந்து விளங்குதவர் வாழ்வு இன்று - அவர்
உலகை என்று ஆள்வதோ தலை நிமிர்ந்து நின்று

1. இறைவனது இல்லமன்றோ இந்த உலகம் - அதில்
எல்லோர்க்கும் உரிமையுடன் உண்டு இடம்
அறைகளிலே கதவுகளோ எதுவுமில்லை - இங்கு
அன்புடனே வாழ்ந்திருந்தால் மறையும் தொல்லை

2. உள்ளமெனும் சோலையிலே அன்பு மலர்ந்தால் இந்த
உலகத்திலே சம உரிமை மணம் கமழும்
வெள்ளமென இறை அன்பு வழிந்தோடினால் - இங்கு
வறியவர்கள் வாழ்வினிலே வலிமை வரும்

3. தனி மனிதன் திருந்தி விட்டால் போதாது - இந்த
தாரணியே முழுத்திருப்பம் பெற வேண்டும்
இனிமேலே வரும் என்று இருந்திடாதே - இன்றே
எளியவர்கள் உணர்வூக்கம் பெற வேண்டும்

Start Downloading Your Apps