அவைகளைப் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் பொக்கிஷக்காரனாகிய மித்திரேதாத்தின் கையினால் எடுக்கச்செய்து, யூதாவின் அதிபதியாகிய சேஸ்பாத்சாரிடத்தில் எண்ணிக்கொடுத்தான்.
அவைகளின் தொகையாவது: பொன் தட்டுகள் முப்பது, வெள்ளித்தாலங்கள் ஆயிரம், கத்திகள் இருபத்தொன்பது.
பொற்கிண்ணங்கள் முப்பது, வெள்ளிக்கிண்ணங்கள் நானூற்றுப்பத்து, மற்றப் பணிமுட்டுகள் ஆயிரம்.
பொன் வெள்ளிப் பணிமுட்டுகளெல்லாம் ஐயாயிரத்து நானூறு, இவைகளையெல்லாம் சேஸ்பாத்சார், சிறையிருப்பினின்று விடுதலைபெற்றவர்கள் பாபிலோனிலிருந்து எருசலேமுக்குப் போகையில், எடுத்துக்கொண்டுபோனான்.
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பாபிலோனுக்குக் கொண்டுபோனவர்களுக்குள்ளே, சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கும் யூதாவிலுள்ள தங்கள் தங்கள் பட்டணங்களுக்கும்,
செருபாபேல், யெசுவா, நெகேமியா, செராயா, ரெலாயா, மொர்தெகாய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், ரேகூம், பானா என்பவர்களோடேகூட திரும்பிவந்த தேசத்துப் புத்திரராகிய இஸ்ரவேல் ஜனமான மனிதரின் தொகையாவது:
பாரோஷின் புத்திரர் இரண்டாயிரத்து நூற்று எழுபத்திரண்டுபேர்.
செபத்தியாவின் புத்திரர் முந்நூற்று எழுபத்திரண்டுபேர்.
ஆராகின் புத்திரர் எழுநூற்று எழுபத்தைந்துபேர்.
யெசுவா யோவாப் என்பவர்களுடைய சந்ததிக்குள்ளிருந்த பாகாத் மோவாபின் புத்திரர் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பன்னிரண்டுபேர்.
ஏலாமின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்குபேர்.
சத்தூவின் புத்திரர் தொளாயிரத்து நாற்பத்தைந்துபேர்.
சக்காயின் புத்திரர் எழுநூற்று அறுபதுபேர்.
பானியின் புத்திரர் அறுநூற்று நாற்பத்திரண்டுபேர்.
பெபாயின் புத்திரர் அறுநூற்று இருபத்துமூன்றுபேர்.
அஸ்காதின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று இருபத்திரண்டுபேர்.
அதொனிகாமின் புத்திரர் அறுநூற்று அறுபத்தாறுபேர்.
பிக்வாயின் புத்திரர் இரண்டாயிரத்து ஐம்பத்தாறுபேர்.
ஆதீனின் புத்திரர் நானூற்று ஐம்பத்து நான்குபேர்.
எசேக்கியாவின் சந்ததியான அதேரின் புத்திரர் தொண்ணூற்றெட்டுப்பேர்.
பேசாயின் புத்திரர் முந்நூற்று இருபத்துமூன்றுபேர்.
யோராகின் புத்திரர் நூற்றுப்பன்னிரண்டுபேர்.
ஆசூமின் புத்திரர் இருநூற்று இருபத்துமூன்றுபேர்.
கிபாரின் புத்திரர் தொண்ணூற்றைந்துபேர்.
பெத்லகேமின் புத்திரர் நூற்றிருபத்துமூன்றுபேர்.