உலக மாய்கையிலே உன்

1. உலக மாய்கையிலே உன் சிந்தனையே வேண்டாம்
ஈலோகம் மாறிடுமே, இயேசுவைச் சேர்ந்திடாயோ!

பல்லவி

உன் இயேசுவை அண்டிக்கொள்
உன் நேசர் பாதம் தேடிக்கொள்
உன்மேல் தன் கண்ணை வைத்து
இன்பப் பாதை காட்டிடுவார்

2. இளைத்துத் தவித்த உன்னை வருந்தி அழைக்கிறாரே
அலைந்து திரிந்த உன்னை விரும்பிக் கேட்கிறாரே -உன்

3. சஞ்சல முற்றோருக்குத் தஞ்சம் கொடுப்பாரே
பாவம் பாடுள்ளோரை ஈடேற்றி நடத்துவாரே- உன்

4. ஆறுதல் வாழ்வு ஜீவன் அன்பாலே ஈந்திடுவார்
அப்பாலே மோட்ச வாழ்வையும் தயாளர் தந்திடுவார்- உன்

5. பாவி நீ ஓடி வந்து தாவி பாதம் பிடித்திடுவாய்
பூவின் வாழ்வைவிட்டு ஆவியில் நிறைந்திடுவாய்- உன்

6. வாக்குத்தத்தம் செய்தவர் வாக்குத் தவறிடாரே
மானிடர் மாறிடுவார் என் நேசர் மாறிடாரே - உன்

Start Downloading Your Apps