என்னாலே ஜீவன்‌ விடுத்தீரோ

என்னாலே ஜீவன்‌ விடுத்தீரோ, - ஸ்வாமீ?
இத்தனை பாட்டுக்கிங்கே அடுத்தீரோ?

பொன்னாட்டதிபதி பரமன்‌ ஆட்டுக்குட்டியே,
பொறுமைக்‌ களவிலாத கிருபைத்‌ திருக்குமாரா,
பூண்டு பொற்‌ குருசினில்‌ அறையுண்டெனை
மீண்டனுக்ரக மிட நெறி கொண்டதோ? - என்‌

சரணங்கள்‌

1. கள்ளனைப்போல்‌ கட்டுண்ட பரிதாபம்‌, - மெய்ப்பூங்‌
காவில்‌ ஆத்துமத்துற்ற மனஸ்தாபம்‌,-வேர்த்து
வெள்ளமாய்‌ ரத்தம்‌ புரண்ட சோபம்‌',-யாரால்‌
விபரித்து முடியும்‌ உன்‌ பிரஸ்தாபம்‌?
எள்ளத்தனை அன்பிலா உள்ளத்‌ துரோகி நானே;
எனால்‌ உமக்கென்ன லாபம்‌? யேசு
மனா பரப்ரம திரு வுளமோ இது? - என்‌

2. சிலுவை மரத்தில்‌ கைகால்‌ நீட்டி, தேவரீர்‌
திருவிலாவைத்‌ துளைக்க ஈட்டி, காயம்‌
வலிய அன்பின்‌ கடைக்கண்‌ காட்டி,-இன்னம்‌
வரவழைக்கிறீர்‌ தயை பாராட்டி;
விலைகொடுத்தெனைக்‌ கூட்டி, மிக்க சலாக்யம்‌ சூட்டி
மீண்டவாறிது மிக்க விசாலமே,
ஆண்டவா, அது பக்கிஷ நேசமே. - என்‌

- வேதநாயகம்‌ சாஸ்திரியார்‌

Start Downloading Your Apps