சீர் ஆவியால் இரக்கமாய்

1. சீர் ஆவியால் இரக்கமாய்
உண்டான வேதமே,
ஒப்பற்ற ஞானமுள்ளதாய்
நமக்குண்டாயிற்றே.

2. அதில் பிறக்கும் போதனை
விளக்கைப்போலவே,
நற்கதி சேரும் மார்க்கத்தை
விளக்கிக் காட்டுமே.

3. இருள் நிறைந்த பூமியில்
அதே என் வெளிச்சம்;
பரத்தை நோக்கிப் போகையில்
அதே நட்சத்திரம்.

4. கர்த்தாவின் அருளால் அதே
மகா ஈவாயிற்று;
அதைக்குறித்தென் நெஞ்சமே
சந்தோஷமாயிரு.

Start Downloading Your Apps