தாகம் தீர்க்கும் ஜீவ நதி

தாகம் தீர்க்கும் ஜீவ நதி
தரணியில் உண்டோ எனத் தேடினேன்

சரணங்கள்

1. அருவியின் நீரை பருகி விட்டேன்
ஆற்றினில் ஊற்றையும் பருகிவிட்டேன்
துரவுகள் கடலும் தாகம் தீர்க்க வில்லை
தூரத்துக் கானலாய் ஆகியதே- தாகம்

2. கானகம் சோலையும் தேடியபின்
வானகம் நோக்கியே அபயமிட்டேன்
கண்களைத் திறந்தேன் ஐந்தருவியென
கன்மலையொன்றில் நீர் சுரக்கக் கண்டேன்- தாகம்

3. பருகியே வாழ்த்தினேன் தாகமில்லை
அருகினில் சென்றேன் கன்மலையுமில்லை
காயங்கள் தன்னில் செந்நீர் சுரக்க
கன்மலையாக என் இயேசு நின்றார் - தாகம்

4. ஐயனின் திருவடி வீழ்ந்தேன் நான்
ஆன்மாவின் தாகமும் தீர்ந்த தென்றேன்
புன்னகை பூத்த புனிதனும் மறைய
புது பெலனடைந்தேன் என் உள்ளத்திலே- தாகம்

Start Downloading Your Apps