தேசமே பயப்படாதே மகிழ்ந்து

தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூரு
சேனையின் கர்த்தர் உன் நடுவில்
பெரிய காரியம் செயதிடுவார்

சரணங்கள்

1. பெலத்தினாலும் அல்லவே
பராக்கிரமும் அல்லவே
ஆவியினாலே ஆகும் என்று
ஆண்டவர் வாக்கு அருளினாரே - தேசமே

2. கசந்த மாறா மதுரமாகும்
கொடிய யோர்தான் அகன்றிடும்
நித்தமும் உன்னை நல்வழி நடத்தி
ஆத்துமாவை தினம் தேற்றிடுவார்- தேசமே

3. கிறிஸ்து இயேசு சிந்தையில்
நிலைத்து என்றும் ஜீவிப்பாய்
ஆவியின் பெலத்தால் அநுதினம் நிறைந்து
உத்தம சாட்சியாய் விளங்கிடுவாய் - தேசமே

Start Downloading Your Apps