பரமண்டலங்களில் வீற்றிருக்கும்


பரமண்டலங்களில் வீற்றிருக்கும்
பரம பிதாவே எந்நாளும்
பரிசுத்தப்படுக உம் நாமம்
பரிவுடன் வருக உம் ராஜ்ஜியம்
பரலோகத்தில் உமது சித்தம்
பண்புடன் செய்யப்படுவது போல்
தரணியிலுமது சித்தமே
தவறாது செய்யப்படுக சதா.
அன்றன்றுள்ள எம் ஆகாரம்
அன்புடன் எங்களுக் கீந்தருளும்
நன்றயலார் கடன் யாம் மன்னிக்கும்
நன்னயம் போலெம் பிழை மன்னியும்
தேவே சோதனைக் கெமை விலக்கி
தீமையினின்றெமை விலக்கி
மேவும் ராஜ்ஜியம் வல்லமை மகிமை
மிகவும் உமதென்றுமே ஆமென்.

Start Downloading Your Apps