நான் உம்மைப்பற்றி ரட்சகா

1.நான் உம்மைப்பற்றி ரட்சகா
வீண் வெட்கம் அடையேன்,
பேரன்பைக் குறித்தாண்டவா
நான் சாட்சி கூறுவேன்.

பல்லவி

சிலுவையண்டையில்
நம்பி வந்து நிற்கையில்
பாவப் பாரம் நீங்கி, வாழ்வடைந்தேன்
எந்த நேரமும் எனதுள்ளத்திலும்
பேரானந்தம் பொங்கிப் பாடுவேன்.

2.ஆ! உந்தன் வல்லநாமத்தை
நான் நம்பிச் சார்வதால்,
நீர் கைவிடீர்! இவ்வேழையைக்
காப்பீர் தேவாவியால்

3.மா வல்ல வாக்கின் உண்மையை
கண்டுணரச் செய்தீர்
நான் ஒப்புவித்த பொருளை
விடாமல் காக்கிறீர்.

4.நீர் மாட்சியோடு வருவீர்
அப்போது களிப்பேன்
ஓர் வாசஸ்தலம்கொடுப்பீர்
மெய்ப்பாக்கியம் அடைவேன்.

Start Downloading Your Apps