நான் தூதனாக வேண்டும்

1. நான் தூதனாக வேண்டும்
விண் தூதரோடேயும்;
பொற் கிரீடம் தலை மேலும்
நல் வீணை கையிலும்
நான் வைத்துப் பேரானந்தம்
அடைந்து வாழுவேன்;
என் மீட்பரின் சமுகம்
நான் கண்டு களிப்பேன்.

2. அப்போது சோர்வதில்லை,
கண்ணீரும் சொரியேன்;
நோய், துக்கம், பாவம், தொல்லை
பயமும் அறியேன்;
மாசற்ற சுத்தத்தோடும்
விண் வீட்டில் தங்குவேன்;
துதிக்கும் தூதரோடும்
நான் என்றும் பாடுவேன்.

3. பிரகாசமுள்ள தூதர்
நான் சாகும் நேரத்தில்
என்னைச் சுமந்து போவார்
என் இயேசுவண்டையில்;
நான் பாவியாயிருந்தும்
என் மீட்பர் மன்னித்தார்;
எண்ணில்லாச் சிறியோரும்
என்னோடு வாழுவார்.

4. மேலான தூதரோடும்
நான் தூதன் ஆகுவேன்,
பொற் கிரீடம் தலைமேலும்
தரித்து வாழுவேன்;
என் மீட்பர்முன் ஆனந்தம்
நான் பெற்று வாழ்வதே
வாக்குக் கெட்டாத இன்பம்,
அநந்த பாக்கியமே.

Start Downloading Your Apps