எந்தன் ஜீவன் இயேசுவே

1.எந்தன் ஜீவன், இயேசுவே,
சொந்தமாக ஆளுமே;
எந்தன் காலம் நேரமும்
நீர் கையாடியருளும்.

2. எந்தன் கை பேரன்பினால்
ஏவப்படும்; எந்தன் கால்
சேவை செய்ய விரையும்,
அழகாக விளங்கும்.

3. எந்தன் நாவு இன்பமாய்
உம்மைப் பாடவும், என் வாய்
மீட்பின் செய்தி கூறவும்
ஏதுவாக்கியருளும்.

4. எந்தன் ஆஸ்தி, தேவரீர்,
முற்றும் அங்கீகரிப்பீர்;
புத்தி கல்வி யாவையும்
சித்தம் போல் பிரயோகியும்.

5. எந்தன் சித்தம் இயேசுவே
ஒப்புவித்து விட்டேனே;
எந்தன் நெஞ்சில் தங்குவீர்,
அதை நித்தம் ஆளுவீர்.

6. திருப் பாதம் பற்றினேன்
எந்தன் நேசம் ஊற்றினேன்;
என்னையே சமூலமாய்
தத்தம் செய்தேன் நித்தமாய்.

Start Downloading Your Apps