ஆறுதலின் மகனாம்

1. 'ஆறுதலின் மகனாம்'
என்னும் நாமம் பெற்றோனாம்
பக்தன் செய்கை வாக்கிலே
திவ்விய ஒளி வீசிற்றே.

2. தெய்வ அருள் பெற்றவன்
மா சந்தோஷம் கொண்டனன்;
வார்த்தை கேட்டநேகரும்
சேர்ந்தார் கர்த்தர் அண்டையும்.

3. பவுல் பர்னபாவையும்
ஊழியத்திற்கழைத்தும்
வல்ல ஞான வரத்தை
ஈந்திர், தூய ஆவியே.

4. கிறிஸ்து வலப் பக்கமாய்
நாங்களும் மாசற்றோராய்
நிற்க எங்கள் நெஞ்சையும்
தேவரீரே நிரப்பும்.

Start Downloading Your Apps