பூமி அதிர்ந்தாலும்

பூமி அதிர்ந்தாலும்
ஆழி பொங்கினாலும்
என்ன நேரிட்டாலும்
அஞ்சிடேன்

சரணங்கள்

1. யெகோவா துணை நிற்கிறார்
அஞ்சிடேன்
எக்காலும் அவர் கைவிடார்
அஞ்சிடேன்

2. ஓர் ஜீவ நதியுண்டு பார்
அஞ்சிடேன்
அத்தால் சந்தோஷம் செய்கிறார்
அஞ்சிடேன்

3. நான் உன்தன் தேவன் என்கிறார்
அஞ்சிடேன்
மாற்றாரை ஓடப் பண்ணுவார்
அஞ்சிடேன்

4. என் யேசு நாதர் நாமம் ஜெயம்
நம்புவேன்
என் யேசு நாதர் நாமம் ஜெயம்
நம்புவேன்

யேசு நாமம் ஜெயம்
யேசு நாமம் ஜெயம்
யேசு நாமம் ஜெயம்
நம்புவேன்

Start Downloading Your Apps