தம்மண்டை வந்த பாலரை

1. தம்மண்டை வந்த பாலரை
ஆசீர்வதித்த ரட்சகர்,
இப்போதும் சிறுவர்களை
அணைக்கத் தயையுள்ளவர்.

2. குழந்தைகளுக்காகவும்
மரித்துயிர்த்த ஆண்டவர்,
சிறந்த நன்மை வரமும்
தரக் காருணியமுள்ளவர்.

3. ஆ, இயேசுவே இப்பிள்ளையை
அனைத்து ஏந்தியருளும்;
அளவில்லாசீர்வாதத்தை
அன்பாகத் தந்திரட்சியும்.

Start Downloading Your Apps