பூர்வ வாழ்க்கையே

முடிந்தது

1. பூரண வாழ்க்கையே,
தெய்வாசனம் விட்டு,
தாம் வந்த நோக்கம் யாவுமே
இதோ முடிந்தது!

2. பிதாவின் சித்தத்தை
கோதற முடித்தார்;
தொல் வேத உரைப்படியே
கஸ்தியைச் சகித்தார்.

3. அவர் படாத் துக்கம்
நரர்க்கு இல்லையே;
உருகும் அவர் நெஞ்சிலும்
நம் துன்பம் பாய்ந்ததே.

4. முள் தைத்த சிரசில்
நம் பாவம் சுமந்தார்;
நாம் தூயோராகத் தம் நெஞ்சில்
நம் ஆக்கினை ஏற்றார்.

5. எங்களை நேசித்தே
எங்களுக்காய் மாண்டீர்;
ஆ, சர்வ பாவப் பலியே,
எங்கள் சகாயர் நீர்.

6. எத்துன்ப நாளுமே,
மா நியாயத்தீர்ப்பிலும்,
உம் புண்ணியம், தூய மீட்பரே
எங்கள் அடைக்கலம்.

7. இன்னும் உம் கிரியை
எங்களில் செய்திடும்
நீர் அன்பாய் ஈந்த கிருபைக்கே
என் அன்பு ஈடாகும்.

Start Downloading Your Apps