ஆத்துமாக்கள் மேய்ப்பரே

ஆத்துமாக்கள் மேய்ப்பரே,
மந்தையைப் பட்சிக்கவும்
சாத்தான் பாயும் ஓநாய் போல்
கிட்டிச் சேரும் நேரமும்
நாச மோசம் இன்றியே
காரும், நல்ல மேய்ப்பரே.

2. பணம் ஒன்றே ஆசிக்கும்
கூலியாளோ ஓடுவான்;
காவல் இன்றிக் கிடக்கும்
தொழுவத்தின் வாசல்தான்;
வாசல், காவல் ஆன நீர்
மந்தை முன் நின்றருள்வீர்.

3. கெட்டுப் போன யூதாஸின்
ஸ்தானத்திற்குத் தேவரீர்,
சீஷர் சீட்டுப்போடவே
மத்தியா நியமித்தீர்;
எங்கள் ஐயம் யாவிலும்,
கர்த்தரே நடத்திடும்.

4. புது சீயோன் நகரில்
பக்தர் வரிசையிலே
நிற்கும் மத்தியாவோடும்
நாங்கள் சேரச் செய்யுமே
கண் குளிர உம்மையும்
காணும் பாக்கியம் அருளும்.

Start Downloading Your Apps