அற்ப வாழ்வை வாஞ்சியாமல்

1. அற்ப வாழ்வை வாஞ்சியாமல்
இன்பம் செல்வம் பின்பற்றாமல்
தெய்வ நேசத்தை ஓயாமல்
நாடுவாய், நாடுவாய்.

2. விரும்பாதே பேர்ப் பிரஸ்தாபம்,
லோக மகிமை பிரதாபம்;
ஆத்ம வாழ்வின் நித்திய லாபம்
நாடுவாய், நாடுவாய்.

3. நாடுவாய் தெய்வாசீர்வாதம்,
கர்த்தர் ஈயும் சற்பிரசாதம்;
பாவம் தீரத் திருப்பாதம்
நாடுவாய், நாடுவாய்.

4. மீட்பர்போல் சுத்தாங்கமாகத்
தாழ்மையோடு சாந்தமாகத்
தொண்டு செய்ய ஆவலாக,
நாடுவாய், நாடுவாய்.

5. பிறர் இயேசுவண்டை சேர,
அவராலே கடைத்தேற
தெய்வ சித்தம் நிறைவேற
நாடுவாய், நாடுவாய்.

6. அருள் நாதர் அரசாளும்
காலம் வந்து, சர்வத்ராளும்
மீட்பைக் காணவும், எந்நாளும்
நாடுவாய், நாடுவாய்.

Start Downloading Your Apps