என்தன்‌ பரம குரு செய்த

என்தன்‌ பரம குரு செய்த உபகாரத்தை
ஏத்தித்‌ துதிப்பேன்‌ நானே.

தந்தைப்‌ பரனிடத்தா னந்தத்‌ தொனி விளங்கச்‌
சத்தமாக நின்ற நித்திய வஸ்துவான - என்‌

1. வானத்‌ தமலர்‌! சேனை கிரகித்து முடியாத
மகிமைப்ர தாபம்‌ மிகுத்‌ தோன்‌,-அதி
ஞானத்துடன்‌ உலகும்‌, பரமும்‌, அதில்‌ நிறைந்த
யாவும்‌ நெறியில்‌ பகுத்தோன்‌,
மேன்மை பொருள தாகத்‌ தேவ மகத்துவத்தின்‌
விளங்கும்‌ அனந்த சுகத்தோன்‌,-அக்கி
யானத்‌ திருள்‌ அகலத்‌ தான்‌ இப்புவியில்‌ உற்ற
அந்த முடி வில்லாத சுந்தர கிறிஸ்துநாத - என்‌

2. மிக்கப்‌ பராபரனோ டொக்க ஒன்றித்திருந்த
முக்கியம்‌ அனைத்தும்‌ விடுத்து,-ஏவை
மக்கள்‌ துயர்‌ அகலத்‌ துக்க உலகமதில்‌
மனுடாவதாரம்‌ எடுத்து,
பக்ஷமாக அடிமைக்‌ கோலம்‌ கொண்டரும்‌
பாடு பட்டுயிர்‌ கொடுத்து,-நரர்‌
அக்கிரமம்‌ அனைத்தும்‌ நிக்கிரகம்‌ புரிந்து,
அந்தகாரம்‌ அற வந்த யேசுகிறிஸ்து - என்‌

3. பாவத்‌ திகில்‌ அறுத்துச்‌, சாபத்தையும்‌ தொலைத்து,
பகைஞன்‌ வினையை நீக்கிக்‌-கொடும்‌
ஆபத்திலும்‌, அடர்ந்த கோபத்திலும்‌ விழுந்த
அடிமைகளைக்‌ கை தூக்கி,
தேவத்திரவியம்‌ என்ற ஜீவ போஜனத்தைத்‌
திருவுள மாய்‌ உண்டாக்கி,-நித்தம்‌
மாபத்தி ரமாய்ப்‌ பிரதாபித்‌ தனுக்ர கித்து,
வைத்துக்‌ காத்த ஒரே நித்திய திரித்வமான - என்‌

- வேதநாயகம்‌ சாஸ்திரியார்‌

Start Downloading Your Apps