நேசபரனைத்‌ துதிப்பாய்‌ ஓ

நேசபரனைத்‌ துதிப்பாய்‌, ஓ நெஞ்சமே!

தாசன்‌ புவியோரில்‌ மா நீசனென்னைப்பிடித்த
மோசம்‌ நிவிர்த்தி செய்த யேசுக்ருபாசமுத்ர - நேச

சரணங்கள்‌

1. மரணம்‌ பிடித்துமென்னை வல்லவன்‌ விடுத்தார்‌;
வலிய பாதாளம்‌ நின்றே மகிமையா யெடுத்தார்‌,
சரணமென்றே புது உயிர்தனைக்‌ கொடுத்தார்‌;
சத்ரு எனக்குச்‌ சேதம்‌ புரியாது தடுத்தார்‌. - நேச

2. பாதக ணனெனக்குண்டோ கொஞ்சமும்‌ பாத்திரம்‌?
பரனருள்‌ நன்மைக்‌ கிப்பாவி எம்மாத்திரம்‌?
தீதன்‌ ருசித்த நலம்‌ அன்பு மா காத்திரம்‌,
செப்புவேன்‌ இங்குமங்கும்‌ எனியனின்‌ தோத்திரம்‌. - நேச

3. அடியனுக்கவர்‌ செய்த அன்புரைத்தாமோ?
ஆயிரம்‌ நாவினால்‌ சொல்வது போமோ?
இடிதனைத்‌ தாங்கிட மனிதரா லாமோ?
இயேசெனைத்‌ தாங்கையில்‌ என்னுயிர்‌ போமோ? - நேச

4. உள்ளும்‌ புறம்புமான எந்த வில்லங்கம்‌
உலகிலெனக்கு வரும்‌? எவ்விதப்‌ பங்கம்‌
தள்ளியே காத்திடும்‌ தகும்‌ யூதா சிங்கம்‌,
தாரணியினில்‌ தனக்கிணையிலாத்‌ தங்கம்‌. - நேச

- அருள்திரு. ஞா. சாமுவேல்‌

Start Downloading Your Apps