தேவா இவ்வீட்டில்‌ இன்றே

தேவா, இவ்வீட்டில்‌ இன்றே மேவி எழுந்து வரவே;-தயை
செய்வாய்‌, எமது கோவே!

சரணங்கள்‌

1. மூவர்‌ ஒருவரான தேவா:-கிறிஸ்துநாதா,-எங்கள்‌
முன்னவா, சத்ய வேதா!
பூவில்‌ எமக்குதவி யாருமில்லை, எம்‌ தாதா',-யேசு
புண்ணியனே, மா நீதா!-இங்கு
நண்ணுவாய்‌, மெய்ப்‌ போதா;-தயை
பண்ணுவாய்‌, வினோதா!
மேவி உனதருளை ஈவாய்‌ இவ்வீட்டின்‌ மீது,
ஜீவனே, யேசு கோனே,-ஏழைப்‌
பாவிகள்‌ மீட்பன்‌ தானே. - தேவா

2. விந்தையுடன்‌ களிப்பும்‌ சந்தமுடன்‌ உண்டாக,-அதி
மேன்மையுடன்‌ சிநேகம்‌
அந்தமுடன்‌ பெருகி எந்தப்‌ பாவமும்‌ ஏக.-என்றும்‌
அத்தனோ டுற வாக,-ஜெப
துந்துமிகள்‌ முழங்க,-ஐக்யம்‌
பந்தமுடன்‌ இலங்க,
தந்தைப்‌ பரனே, இன்று உன்றன்‌ அருள்‌ நிறைவாய்ச்‌
சொந்தமுடன்‌ ஈவாயே,-இவர்‌
சந்ததம்‌ வாழ நீயே. - தேவா

3. இங்கு வசிக்கும்‌ மட்டும்‌ துங்கன்‌ மொழிக்‌ கிசைந்தே,-பரன்‌
இஷ்டப்படி நடந்தே,
அங்கம்‌, மனது யாவும்‌ பங்கம்‌இன்றித்‌ தொடர்ந்தே,-இவர்‌
அனுதினமும்‌ மகிழ்ந்தே,-உயர்‌
அம்பர வீட்டில்‌ சேர்ந்து,-மிகு
கெம்பீரமாக வாழ்ந்து,
புங்கமுடன்‌ நிதமும்‌ தங்கி யேசு பரனில்‌
இங்கிதமாய்க்‌ கொண்டாட,-நிதம்‌
மங்களக்‌ கவி பாட. - தேவா

- ச. யோசேப்பு

Start Downloading Your Apps