முடிந்ததே இந்நாளும்

முடிந்ததே இந்நாளும்‌;
உம்மையே துதிப்போம்‌,
எத்தோஷமின்றி ராவும்‌,
சென்றிடக்‌ கெஞ்சுவோம்‌;
நாதா உம்மோடு வைத்திடும்‌,
நீர்‌ ராவில்‌ எம்மைக்‌ காத்திடும்‌.

2. முடிந்ததே உற்சாகம்‌;
உள்ளம்‌ உயர்த்துவோம்‌,
எப்பாவம்‌ இன்றி ராவும்‌
சென்றிடக்‌ கெஞ்சுவோம்‌!
ராவை ஒளியாய்‌ மாற்றிடும்‌,
நீர்‌ ராவில்‌ உம்மைக்‌ காத்திடும்‌

3. முடிந்ததே எம்‌ வேலை
களிப்பாய்ப்‌ பாடுவோம்‌
எச்சேதமின்றி ராவும்‌
சென்றிடக்‌ கெஞ்சுவோம்‌;
நாதா உம்மோடு வைத்திடும்‌;
நீர்‌ ராவில்‌ எம்மைக்‌ காத்திடும்‌.

4. காப்பீர்‌ எம்‌ ஆத்துமாவை
எம்‌ பாதை நேரிடும்‌
எம்‌ மோசம்‌ சேதம்‌ யாவும்‌
உமக்குத்‌ தோன்றிடும்‌;
மாந்தரின்‌ நேசா, கேட்டிடும்‌
எத்தீங்குமின்றிக்‌ காத்திடும்‌.

Start Downloading Your Apps