உலகத்தைப் பலமுள்ள

உலகத்தைப்‌ பலமுள்ள
கையால்‌ ஆண்டு, தினமே
என்னைக்‌ காக்கும்‌ உண்மையுள்ள
மா பெரிய கர்த்தரே,
என்னைத்‌ தெய்வ துதிக்கும்‌
இந்த நாள்‌ எழுப்பிடும்‌.

2. கர்த்தரின்‌ திருநாளான
இந்த நாள்‌ மா இன்பமே;
இதில்‌ ஓய்வும்‌ உண்மையான
ஆறுதலும்‌ ஈவீரே;
இதில்‌ ஆவியானவர்‌
மோட்ச வழி காட்டுவர்‌.

3. என்‌ ரட்சிப்பை நடப்பிக்க
இந்த வேளை தக்கதே;
தெய்வ தயவைச்‌ சிந்திக்க
என்னைத்‌ தூண்டி ஏவுமே;
என்‌ ஜெபம்‌ புகழ்ச்சியும்‌
வானமட்டும்‌ ஏறவும்‌.

4. தேனைப்பார்க்கிலும்‌ தித்திக்கும்‌
உம்முடைய வசனம்‌
ஆத்துமத்தைப்‌ போவிப்பிக்கும்‌
ருசியான அமிர்தம்‌;
ராப்பகலும்‌ அதை நான்‌
சிந்தித்தால்‌ மெய்ப்‌ பாக்கியவான்

5. எங்கள்‌ ஜெபத்துக்கன்பாக
நீரே ஆமேன்‌ என்கவும்‌,
மோட்சத்தில்‌ உம்மை நேராக
நாங்கள்‌ பார்க்குமட்டுக்கும்‌,
ஏகமாய்‌ வணங்குவோம்‌;
உம்மைப்‌ பாடிப்‌ போற்றுவோம்‌.

Start Downloading Your Apps