நான் உன்னை விட்டு விலகுவதில்லை

நான் உன்னை விட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை
நான் உன்னை காண்கிற தேவன்
கண்மணி போல் உன்னைக் காப்பேன்

1. பயப்படாதே நீ மனமே - நான்
காத்திடுவேன் உன்னை தினமே
அற்புதங்கள் நான் செய்திடுவேன் - உன்னை
அதிசயமாய் நான் நடத்திடுவேன் - நான்

2. திகையாதே கலங்காதே மனமே - நான்
உன்னுடன் இருக்க பயம் ஏன்?
கண்ணீர் யாவையும் துடைத்திடுவேன் - உன்
கவலைகள் யாவையும் போக்கிடுவேன் - நான்

3. அனுதினம் என்னை தேடிடுவாய் - நான்
அளித்திடும் பலனை பெற்றிடுவாய்
அத்திமரம் போல் செழித்திடுவாய் - நான்
ஆசையாய் உண்ண கனி கொடுப்பாய்- நான்

3. நீதியின் வலக்கரத்தாலே - உன்னை
தாங்குவேன் நான் அன்பினாலே
ஆவியில் உண்மையாய் ஜெபித்திடுவாய்
அல்லேலுயா என்றார்ப்பரிப்பாய்- நான்

Start Downloading Your Apps