பந்திவிட்டெழுந்தார் பரம என்

பந்திவிட்டெழுந்தார் பரம என் ராஜா

அனுபல்லவி

பன்னிரு சீடருக்கும் பணிவிடை செய்ய வென்று

1. வஸ்திரம் கழற்றி மறு சேலையை எடுத்து
அரையிலே கட்டிக்கொண்டு அவர் செய்த செய்கைகளை - பந்தி

2. பாத்திரத்தில் தண்ணீர் மொண்டு சீஷரண்டை வந்து
சீஷருட கால்களையும் சீக்கிரம் கழுவினாரே- பந்தி

3. கட்டியிருந்த தமது சேலையால் துடைத்தார்
கடந்த பேதுருவையும் கழுவவும் நின்றார்- பந்தி

4. நானுன்னை கழுவாவிட்டால் அருமைப் பேதுருவே
என்னிடத்தில் பங்குமில்லை என்றுனக்குச் சொல்லுகிறேன்- பந்தி

5. மெய்யாகவே மெய்யாகவே உங்களிலொருவன்
என்னைக் காட்டி கொடுப்பானென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் - பந்தி

6. பன்னிரு சீடர்களும் நானோ நானோ வென்றார்
காட்டிக்கொடுக்கும் யூதாசும் நானோ ரபி என்றான்- பந்தி

Start Downloading Your Apps