பாவத்தின் பலன் நரகம்

1. பாவத்தின் பலன் நரகம், ஓ பாவி நடுங்கிடாயோ?
காண்பதெல்லாம் அழியும், காணாததல்லோ நித்தியம்

இயேசு ராஜா வருவார்
இன்னும் கொஞ்சங் காலந்தான்
மோட்சலோகம் சேர்ந்திடுவோம்- இயேசு

2. உலக இன்பம் நம்பாதே
அதின் இச்சை யாவும் ஒழியும்
உன் ஜீவன் போகும் நாளிலே
ஓர் காசும் கூட வாராதே!- இயேசு

3. உன் காலமெல்லாம் போகுதே
உலக மாய்கையிலே
ஓ தேவ கோபம் வருமுன்
உன் மீட்பரண்டை வாராயோ- இயேசு

4. தேவன் பின் வெள்ளம் ஓடுதே
கல்வாரி மலை தன்னிலே
உன் பாவம் யாவும் நீங்கிப்போம்
அதில் ஸ்நானம் செய்வதாலே - இயேசு

5. மா பாவியான என்னையும்
என் நேசர் ஏற்றுக் கொண்டாரே
ஓ பாவி நீயும் ஓடிவா
தேவாசீர்வாதம் பெறுவாய் - இயேசு

Start Downloading Your Apps