என்‌ சிலுவை எடுத்து

என்‌ சிலுவை எடுத்து, என்‌ இயேசுவே,
இச்சணம்‌ பின்னே வாறேன்‌.

இந்நில மீதினில்‌ எனக்காயுயிர்‌ விட்டீர்‌;
இரட்சகரே! எனக்குள்ள யாவும்‌ விட்டு. - என்‌

சரணங்கள்‌

1. உலகும்மை விட்டிடினும்‌-உம்‌ தயைாயால்‌
உம்மை நான்‌ பின்‌ செல்லுவேன்‌,
அலகை என்மேல்‌ பாய்ந்து அதிகமாய்‌ எதிர்த்தாலும்‌,
அஞ்சாமல்‌ போர்செய்து அவனை மேற்கொண்டு நான்‌. - என்‌

2. என்றன்‌ சுதந்தரத்தை-இழக்கினும்‌
சொந்தம்‌ நீரே எனக்கு;
பந்து சனங்களும்‌ பற்றுறு நேசரும்‌
பகைத்துப்‌ பழிப்பின்‌ என்‌ பங்கு நீரல்லவோ! - என்‌

3. பாடுகள்‌ பட்டிடுவேன்‌,-உம்மோடு நான்‌
பாரநுகஞ்‌ சுமப்பேன்‌;
ஆடுகளுக்காக அரிய சீவன்‌ தந்த
அன்பான மேய்ப்பரே, ஆடுகளை மேய்ப்பேன்‌. - என்‌

4. ஆசை மேற்கொள்ள விடேன்‌,-கெட்டலோக
பாசம்‌ அணுகவிடேன்‌;
ஈசன்‌ லோகத்திலென்றும்‌ நேசமுடனே தங்கி
மாசுகளற உந்தன்‌ தாசனாய்‌ விளங்கிட. - என்‌

- அருள்திரு. வே. சந்தியாகு

Start Downloading Your Apps