என்னோடிரும் மா நேச

என்னோடிரும்‌, மா நேச கர்த்தரே,
வெளிச்சம்‌ மங்கி இருட்டாயிற்றே;
மற்றோர்‌ சகாயம்‌ அற்றபோதிலும்‌,
நீங்கா ஒத்தாசை நீர்‌, என்னோடிரும்‌.

2. நீர்மேல்‌ குமிழிபோல்‌ என்‌ ஆயுசும்‌,
இம்மையின்‌ இன்ப வாழ்வும்‌ நீங்கிடும்‌;
கண்‌ கண்ட யாவும்‌ மாறி! வாடிடும்‌
மாறாத கர்த்தர்‌ நீர்‌, என்னோடிரும்‌.

3. நியாயம்‌ தீர்ப்போராக என்னண்டை
வராமல்‌, சாந்தம்‌ தயை கிருபை
நிறைந்த மீட்பராக சேர்ந்திடும்‌;
நீர்‌ பாவி நேசரே, என்னோடிரும்‌.

4. நீர்‌ கூடநின்று அருள்‌ புரியும்‌;
பிசாசின்‌ கண்ணிக்கு நான்‌ தப்பவும்‌
என்‌ துணைநீர்‌, என்‌ தஞ்சமாயிரும்‌;
இக்கட்டில்‌ எல்லாம்‌ நீர்‌ என்னோடிரும்‌.

5. நீர்‌ ஆசீர்வதித்தால்‌ கண்ணை விடேஸ்‌;
நீரே என்னோடிருந்தால்‌ அஞ்சிடேன்‌;
சாவே, எங்கே உன்‌ கூரும்‌ ஜெயமும்‌?
நான்‌ உம்மால்‌ வெல்ல நீர்‌ என்னோடிரும்‌.

6. நான்‌ சாகும்‌ அந்தகார நேரத்தில்‌
உம்‌ சிலுவையைக்‌ காட்டும்‌ சாகையில்‌
விண்‌ ஜோதி வீசி இருள்‌ நீக்கிடும்‌;
வாழ்நாள்‌ சாங்காலிலும்‌ என்னோடிரும்‌.

Start Downloading Your Apps