நின்‌ பாதம்‌ துணை அல்லால்‌

நின்‌ பாதம்‌ துணை அல்லால்‌,
வேறொரு துணை இல்லை
நித்ய பரம போதா.

என்‌ பாவம்‌ போக்கியே கிருபை புரியும்‌, சுவாமீ,
ஏக வஸ்துவான ஏசுக்‌ கிறிஸ்து நாதா! - நின்‌

சரணங்கள்‌

1. ஆதி மனிதருக்கன்‌ றோதியபடி மனு
அவதாரமாய்ப்‌ பிறந்தீர்‌; ஜாதி அனைத்தும்‌ உய்ய,
நீதிக்கென்று தலைசாய்த்துக்‌ குருசில்‌ இறந்தீர்‌;
வேதம்‌ முழுதும்‌ நிறைவேற்றிக்‌ கடைசியிலே
வெற்றி முடியும்‌ சிறந்தீர்‌,
ஏதம்‌' இல்லாத அ னாதி திருமகனே.
எங்கும்‌ நிறைந்திலங்கும்‌ ஏசுகிறிஸ்தென்‌ தேவா! - நின்‌

2. தேவரீருக்‌ கேற்காத குற்றம்‌ செய்திருந்தாலும்‌,
சித்தம்‌ இரங்கி வாரும்‌;
மேவி எனது வினை யாவும்‌ அகல
இந்த வேளை எனையும்‌ காரும்‌;
பாவிக்குதவியாக, மனுவேலே, நீர்‌ பட்ட
பாடனைத்தையும்‌ பாரும்‌;
ஆவலாக உனை அடைந்து சரண்‌ புகுந்தேன்‌;
ஆபத்தை நீக்கும்‌, ஐயா, இப்போ மெய்யாய்‌! - நின்‌

- வேதநாயகம்‌ சாஸ்திரியார்‌

Start Downloading Your Apps