பாவி நான்‌ என்ன செய்வேன்‌

பாவி நான்‌ என்ன செய்வேன்‌,-கோவே,
ஜீவன்‌ நீர்‌ விட்டதற்காய்‌?

தேவ கோபத்தினால்‌ மேவிச்‌ சிலுவையில்‌
தாவி உயிர்‌ விட்டு, ஜிவித்த தென்கொலோ? - பாவி

சரணங்கள்‌

1. நாடி எனைத்‌ தயவாய்‌-மணஞ்‌ செய்ய-தேடி வந்தீர்‌, அரசே
ஆடுகளுக்காக நீடி உயிர்‌ தர,
பாடு பட்டுக்‌ குரு குடிறந்தீர்‌ அன்றோ? - பாவி

2. பொன்னுல காதிபனே,-தேவரீர்‌-என்ன செய்தீர்‌, ஐயனே?
சின்னப்‌ படுத்தவும்‌ கன்னடித்தடிக்கவும்‌,
சென்னியில்‌ முண்முடி தன்னை அழுத்தவும்‌. - பாவி

3. வாரால்‌ அடிக்கப்பட்டு,-குட்டுண்டு-
வாதைப்ட்டெண்ணம்‌ அற்றீர்‌,
சீரா! மனுடவ தாரா, சருவாதி
காரா, பரம குமாரா, ஒலோலமே! - பாவி

4. வாதை உமக்கெதினால்‌-உண்டாயிற்று?-பாதகி பாவத்தினால்‌
வேதம்‌ நிறைவுற, ஆதி பவம்‌ அற,
நீதி தரும்‌ யேசு நாத சுவாமியே. - பாவி

5. குற்றமற்ற மீட்பர்‌,-பவக்கடன்‌-முற்றும்‌ அறத்தீர்ப்பர்‌,
கொற்றவர்க்கும்‌, கல்வி கற்றவர்க்கும்‌, சுரர்‌
மற்ற வர்க்கும்‌ அளவற்ற கிருபையே. - பாவி

- வேதநாயகம்‌ சாஸ்திரியார்‌

Start Downloading Your Apps