பாவி வா பாவி வா

1 பாவி வா, பாவி வா, பரனண்டையே வா,
பாவப்பாரம் சுமந் திளைத்தோனே, நீ வா

2 பாவி வா, பாவி வா, திகையாதே நீ வா,
வரும் பாவியை ஓர் போதும் தள்ளேனே வா.

3 காணா தாட்டை மேய்ப்பன் தேடும் மாதிரி போல்
நானே நல்ல மேய்ப்பன் உன்னைத் தேடிவந்தேன்.

4 தாகம் மிகுந்தோனே தண்ணீரண்டை நீ வா
தாகம் தீர்த்திடுவேன் ஜீவ தண்ணீரினால்

5 உந்தன் பாவத்துக்காய் நானே பாடுபட்டேன்
எந்தனுக்கு உந்தன் நெஞ்சம் தந்திடவா

6 உனக்காய் மரித்தேன் ஈனக் கோலமதாய்
எனக்கே உனையே படைப்பாய் நிதமே.

Start Downloading Your Apps