வாரும்‌ நாம்‌ எல்லோரும்‌ கூடி

வாரும்‌ நாம்‌ எல்லோரும்‌ கூடி,
மகிழ்‌ கொண்டாடுவோம்‌;-சற்றும்‌
மாசிலா நம்‌ யேசு நாதரை
வாழ்த்திப்‌ பாடுவோம்‌. ஆ!

சரணங்கள்‌

1. தாரகம்‌ அற்ற ஏழைகள்‌ தழைக்க நாயனா,-இந்தத்‌
தாரணி யிலே மனுடவ தாரம்‌ ஆயினார்‌. - வாரும்‌

2. மா பதவியை இழந்து வறியர்‌ ஆன நாம்‌,-அங்கே
மாட்சி உற வேண்டியே அவர்‌ தாழ்ச்சி ஆயினார்‌. - வாரும்‌

3. ஞாலமதில்‌ அவர்க்கிணை நண்பர்‌ யாருளர்‌,-பாரும்‌
நம்‌ உயிரை மீட்கவே அவர்‌ தம்‌ உயிர்‌ விட்டார்‌. - வாரும்‌

4. மா கொடிய சாவதின்‌ வலிமை நீக்கியே,-இந்த
மண்டலத்தி னின்றுயிர்த்‌ தவர்‌ விண்டலஞ்‌ சென்றார்‌. - வாரும்‌

5. பாவிகட்‌ காய்ப்‌ பரனிடம்‌ பரிந்து வேண்டியே,-அவர்‌
பட்சம்‌ வைத்‌ துறும்‌ தொழும்பரை ரட்சை செய்கிறார்‌. - வாரும்‌

- யோ. பால்மர்‌

Start Downloading Your Apps