மா தூய ஆவி இறங்கும்

1. மா தூய ஆவி! இறங்கும்,
விண் தீபம் நெஞ்சில் ஏற்றிடும்;
ஞானாபிஷேக தைலம் நீர்
நல்வரம் ஏழும் ஈகிறீர்.

2. மெய் ஜீவன், ஆறுதல், அன்பும்
உம் அபிஷேகம் தந்திடும்;
ஓயாத ஒளி வீசியே
உள்ளத்தின் மருள் நீக்குமே.

3. துக்கிக்கும் நெஞ்சைத் தேற்றவே
ஏராள அருள் பெய்யுமே;
மாற்றார் வராமல் காத்திடும்,
சீர் வாழ்வு சுகம் ஈந்திடும்.

4. பிதா, குமாரன், ஆவியும்
திரியேகர் என்றும் போதியும்;
யுகயுகங்களாகவே
உம் தாசர் பாடும் பாட்டிதே-
பிதா, சுதன், சுத்தாவி! உமக்கே
சதா நித்தியமும் ஸ்துத்தியமே!

Start Downloading Your Apps