ஆத்துமா கர்த்தரைத்‌ துதிக்கின்றதே

ஆத்துமா கர்த்தரைத்‌ துதிக்கின்றதே,-என்றன்‌
ஆவியும்‌ அவரில்‌ களிக்கின்றதே,-இதோ!

நேர்த்தியாய்ப்‌ பாடுவேன்‌, நிதங்கனிந்தே எந்தன்‌
பார்த்திப னுட பதந்‌ தினம்பணிந்தே.-இதோ! - ஆத்துமா

சரணங்கள்‌

1. அடிமையின்‌ தாழ்மையைப்‌ பார்த்தாரே,-என்னை
அனைவரும்‌ பாக்கிய ளென்பாரே,
முடிவில்லா மகிமை செய்தாரே,-பல
முடையவர்‌ பரிசுத்தர்‌ என்பாரே.-இதோ! - ஆத்துமா

2. பயப்படும்‌ பத்தருக்‌ கிரங்குகிறார்‌,-நரர்‌
பார்த்திடப்‌ பெருஞ்செயல்‌ புரிகின்றார்‌;
உயர்த்திடு நரர்களைச்‌ சிதறடிப்பார்‌,-தன்னை
உகந்தவர்‌ தாழ்ந்திடில்‌ உயர்த்துகின்றார்‌.-இதோ! - ஆத்துமா

3. முற்பிதாக்‌ களுக்கவர்‌ சொன்னதுபோல்‌-அந்த
முனியாபி ராமுட ஜனமதன்பால்‌,
நட்புடன்‌ நினைவொடு நல்லிசரேல்‌-அவன்‌
நலம்பெற ஆதரித்‌ தார்மறவேல்‌.-இதோ! - ஆத்துமா

- ச.த. ஞானமணி

Start Downloading Your Apps