விடியற்காலத்து வெள்ளியே

1. விடியற்காலத்து வெள்ளியே, தோன்றி
கார் இருள் நீங்கத் துணைபுரிவாய்!
உதய நட்சத்திரமே, ஒளி காட்டி
பாலக மீட்பர்பால் சேர்த்திடுவாய்.

2. தண் பனித் துளிகள் இலங்கும்போது
முன்னணையில் அவர் தூங்குகின்றார்;
வேந்தர், சிருஷ்டிகர், நல் மீட்பர் என்று
தூதர்கள் வணங்கிப் பாடுகின்றார்.

3. ஏதோமின் சுகந்தம், கடலின் முத்து,
மலையின் மாணிக்கம் உச்சிதமோ?
நற்சோலையின் வெள்ளைப் போளம் எடுத்து
தங்கமுடன் படைத்தல் தகுமோ?

4. எத்தனை காணிக்கை தான் அளித்தாலும்
மீட்பர் கடாக்ஷம் பெறல் அரிதே;
நெஞ்சின் துதியே நல் காணிக்கையாகும்
ஏழையின் ஜெபம் அவர்க்கருமை

5. விடியற்காலத்து வெள்ளியே, தோன்றிக்
கார் இருள் நீங்கத் துணைபுரிவாய்;
உதய நக்ஷத்திரமே ஒளி காட்டிப்
பாலக மீட்பர்பால் சேர்ந்திடுவாய்.

Start Downloading Your Apps