அகோர காற்றடித்ததே

1. அகோர காற்றடித்ததே,
ஆ! சீஷர் தத்தளித்தாரே;
நீரோ நல் நித்திரையிலே
அமர்ந்தீர்.

2. "மடிந்தோம்! எம்மை ரட்சிப்பீர்!
எழும்பும்" என்க, தேவரீர்;
காற்றை அதட்டிப் பேசினீர்
"அமரு".

3. அட்சணமே அடங்கிற்றே
காற்று கடல்-சிசுபோலே;
அலைகள் கீழ்ப்படிந்ததே
உம் சித்தம்.

4. துக்க சாகர கோஷ்டத்தில்
ஓங்கு துயர் அடைகையில்,
பேசுவீர் ஆற உள்ளத்தில்,
"அமரு".

Start Downloading Your Apps