பாவி என்னிடம்‌ வர

பாவி, என்னிடம்‌ வர
மனதில்லையா? ஓ!

சரணங்கள்‌

1. பாவத்துள்‌ மூழ்கிச்‌ சாவுற்றாயே நீ,
சீவன்‌ தனைப்பெறவே. - ஓ! பாவி

2. இருளுக்குட்‌ சிக்கி அருளற்றுப்‌ போனாய்த்‌
தெருளொளி தனைப்‌ பெறவே. - ஓ! பாவி

3. என்‌ சமாதானம்‌ உன்‌ சுகமாகும்‌,
நெஞ்சைப்‌ பூராய்த்‌ திறந்து. - ஓ! பாவி

4. அசுத்தங்கள்‌ நீங்கிப்‌ பசிதாகமில்லையோ?
பரிசுத்தஞ்‌ செய்வேனே. - ஓ! பாவி

5. மண்ணிலே நேசம்‌ வைப்பாயோ மோசம்‌,
விண்ணிலிடங்‌ கிடையா. - ஓ! பாவி

6. எனதிடம்‌ அருகும்‌ எவரையுந்‌ தள்ளேன்‌,
கணத்தில்‌ விரைந்திடுவாய்‌. - ஓ! பாவி

- அருள்திரு. வே. மாசிலாமணி

Start Downloading Your Apps