ஜீவனுள்ள தேவனே வாரும்

1. ஜீவனுள்ள தேவனே வாரும்
ஜீவ பாதையிலே நடத்தும்
ஜீவத்தண்ணீர் ஊறும் ஊற்றிலே
ஜீவன் பெற என்னை நடத்தும்

பல்லவி

தேவனே நீர் பெரியவர், தேவனே நீர் பரிசுத்தர்
தேவனே நீர் நல்லவர், தேவனே நீர் வல்லவர்

2. பாவிகள் துரோகிகள் ஐயா
பாவ ஆதாம் மக்களே தூயா
பாதகர் எம் பாவம் போக்கவே
பாதகன் போல் தொங்கினீரல்லோ

3ஐந்து கண்ட மக்களுக்காக
ஐந்து காயமேற்ற நேசரே
நொந்துருகி வந்த மக்கள் மேல்
நேச ஆவி வீசச் செய்குவீர்

4வாக்குத்தத்தம் செய்த கர்த்தரே
வாக்கு மாறா உண்மை நாதனே
வாக்கை நம்பி வந்து நிற்கிறோம்
வல்ல ஆவி மாரி ஊற்றுவீர்

5நியாயத்தீர்ப்பின் நாள் நெருங்குதே
நேசர் வர காலமாகுதே
மாய லோகம் நம்பி மாண்டிடும்
மானிடரை மீட்க மாட்டீரோ?

Start Downloading Your Apps