சர்வத்தையும் அன்பாய்

1.சர்வத்தையும் அன்பாய்
காப்பாற்றிடும் கர்த்தாவை.
அநேக நன்மையால்
ஆட்கொண்ட நம் பிரானை
இப்போது ஏகமாய்
எல்லாரும் போற்றுவோம்;
மா நன்றி கூறியே.
சாஷ்டாங்கம் பண்ணுவோம்

2.தயாபரா, என்றும்
எம்மோடிருப்பீராக.
கடாட்சம் காண்பித்து
மெய் வாழ்வை ஈவீராக:
மயங்கும் வேளையில்
நேர் பாதை காட்டுவீர்:
இம்மைமறுமையில்
எத்தீங்கும் நீக்குவீர்

3.வானாதி வானத்தில்
என்றென்றும் அரசாளும்
திரியேக தெய்வத்தை
விண்ணோர் மண்ணோர் எல்லாரும்
இப்போதும் எப்போதும்
ஆதியிற் போலவே
புகழ்ந்து ஸ்தோத்திரம்
செலுத்துவார்களே

Start Downloading Your Apps