என் ரட்சகா நீர் என்னிலே

1. என் ரக்ஷகா, நீர் என்னிலே
மென்மேலும் விளங்கும்;
பொல்லாத சிந்தை நீங்கவே
சகாயம் புரியும்.

2. என் பலவீனம் தாங்குவீர்
மா வல்ல கரத்தால்;
சாவிருள் யாவும் நீக்குவீர்
மெய் ஜீவன் ஜோதியால்.

3. துராசாபாசம் நீங்கிடும்
உந்தன் பிரகாசத்தால்
சுத்தாங்கக் குணம் பிறக்கும்
நல்லாவி அருளால்.

4. மாசற்ற திவ்விய சாயலை
உண்டாக்கியருளும்;
என்னில் தெய்வீக மகிமை
மென்மேலும் காண்பியும்.

5. சந்தோஷிப்பித்துத் தாங்குவீர்
ஒப்பற்ற பலத்தால்;
என் நெஞ்சில் அனல் மூட்டுவீர்
பேரன்பின் ஸ்வாலையால்.

6. நீர் பெருக, நான் சிறுக
நீர் கிரியை செய்திடும்;
மெய் பக்தியில் நான் வளர
காடாட்சித்தருளும்.

Start Downloading Your Apps