கதிரவன்‌ எழுகின்ற காலையில்‌

கதிரவன்‌ எழுகின்ற காலையில்‌ இறைவனைத்‌
துதி செய்ய மனமே-எழுந்திராய்‌.

2. வறண்டு தண்ணீர்‌ அற்ற வனம்‌ இந்தப்‌ புவிதனில்‌
திரண்ட தயை தேவை-நாடுவேன்‌.

3. கடவுளின்‌ வல்லமை, கன மகிமை காணும்‌
இடமதில்‌ செல்வதே-என்‌ இஷ்டம்‌.

4. ஜீவனைப்‌ பார்க்கிலும்‌ தேவனின்‌ காதலை
ஆவலாய்‌ நாடி நான்‌-போற்றுவேன்‌.

5. ஆயுள்‌ பரியந்தம்‌ ஆண்டவர்‌ நாமத்தை
நேயமாய்‌ பாடி நான்‌-உயர்த்துவேன்‌.

6. மெத்தையில்‌ ராச்சாமம்‌ நித்திரை கொள்கையில்‌
கர்த்தரின்‌ செயல்களைச்‌-சிந்திப்பேன்‌.

7. அல்லும்‌ பகலும்‌ நான்‌ அவர்‌ செட்டைகளின்கீழ்த்‌
தொல்லைக்கு நீங்கியே-ஒதுங்குவேன்‌.

8. ஆத்துமம்‌ தேவனை அண்டிக்‌ கொள்ள அவர்‌
நேத்திரம்‌ போல்‌ என்னைக்‌ காக்கிறார்‌.

- த. யோசேப்பு

Start Downloading Your Apps