வானம்‌ பூமியோ? பராபரன்‌

வானம்‌ பூமியோ? பராபரன்‌
மானிடன்‌ ஆனாரோ? என்ன இது?

ஞானவான்களே, நிதானவான்களே, - என்ன இது? - வானம்

சரணங்கள்‌
1. பொன்னகரத்‌ தாளும்‌, உன்னதமே நீளும்‌
பொறுமைக்‌ கிருபாசனத்துரை,
பூபதி* வந்ததே அதிசயம்‌!-ஆ! என்ன இது! - வானம்‌

2. சத்ய சருவேசன்‌, துத்ய கிருபைவாசன்‌,
நித்ய பிதாவினோர்ம
கத்துவக்‌ குமாரனோ இவர்‌?-ஆ! என்ன இது? - வானம்‌

3. மந்தைக்‌ காட்டிலே மாட்டுக்கொட்டிலிலே
கந்தைத்‌ துணியைப்‌ பொதிந்த சூட்சி,'
நிந்தைப்‌ பாவிகள்‌ சொந்தக்‌ கண்காட்சி!-ஆ! என்ன இது?
- வானம்‌

4. வேறே பேரல்ல, சுரர்‌ விண்ணவர்‌ ஆருமல்ல;
மாறில்லாத ஈறில்லாத”
வல்லமைத்‌ தேவனே புல்லில்‌ கிடக்கிறார்‌! - ஆ! என்ன இது?
- வானம்‌

5. சீயோனின்‌ மாதே, இனி க்ஷெணந்தரியாதே,
மாயமென்ன?” உனக்குச்‌ சொல்லவோ?
வந்தவர்‌ மணவாளனல்லவோ?-ஆ! என்ன இது? - வானம்‌

-வே. சாசுதிரியார்‌

Start Downloading Your Apps