பாவி ஏசனைத் தானே

பாவி ஏசனைத் தானே தேடித் துயர் மேவினார்
இதைத் தியானியே

சரணங்கள்

1.பரமசியோன் மலைக்கரசர் நற்பாலன்
பரிசுத்த தூதர் பவனி செய்யும் பொற்பாதன்
மானிடனாக அவதரித்த தெய்வீகன்
வல்ல பேயை ஜெயித்த மா மனுவேலன் -பாவி

2.தீய பாவிகள் பாவ நித்திரை செய்ய
தேவ கோபாக்கினி அவர் மீதில் பெய்ய
தோஷம் சுமந்து யேசு தேவாட்டுக் குட்டி
துன்பக் கடலில் அமிழ்ந் தாற்றுதல் செய்ய-பாவி

3.இந்தப் பாத்திரம் என்னை விட்டகலாதோ?
இல்லையானால் உமது இஷ்டமதென்றே
சிந்தை துயரடையச் செப்பினார் அன்றோ
சுவாமி உனக்காய் பிணைப்பட்டதால், அந்தோ! -பாவி

4.கெத்செமனேயில் ஏசு பட்டதை நினையே;
கேவலமான உன்தன் பாவத்தை மறவே;
அத்துமநேசர் பதம் ஆவலாய் பணியே;
அன்பின் கரத்தாலுனை அணைப்பார். நிச்சயமே-பாவி

Start Downloading Your Apps