காணிக்கை தருவாயே கர்த்தருக்கு

காணிக்கை தருவாயே-கர்த்தருக்குனது
காணிக்கை தருவாயே

காணிக்கை தா உனக்காய்‌ ஆணிக்‌ குரிசி லேசு
வேணும்‌ ரட்சிப்பினை நீ காணும்படி செய்ததால்‌. - காணிக்கை

சரணங்கள்‌

1. பத்தில்‌ ஒரு பங்குதானோ?-பத்தினில்‌ கட்டுப்‌
பட்ட யூதருக்‌ கல்லவோ?
அத்தன்‌ உனக்களித்த அளவை உட்கார்ந்து பார்த்தால்‌,
பத்தில்‌ ஒரு பங்கல்ல, பல மடங்காகிடாதோ? - காணிக்கை

2. உன்றன்‌ உடல்‌ உன்‌ சொந்தமோ?-அதைவிடினும்‌
உன்‌ மனம்‌ ஆவி பந்தமோ?
அன்னவன்‌ உடைய தென்றறிந்து உணர்வாயானால்‌
உன்னையும்‌ உன்னுடைய உடைமையுமல்லோ ஈவாய்‌? - காணிக்கை

3. தேவ வசனம்‌ பரப்ப,-அதனுக்கென்று
செல்லும்‌ செலவை நிரப்ப,
ஆவலாய்‌ யேசுவுக்கே ஆராதனை நடத்தும்‌
தேவ ஊழியத்துக்கும்‌ திறந்த மனதுடனே - காணிக்கை

4. பயிர்‌ பலன்‌ மூலமாகவும்‌,-இன்றும்‌ பலர்க்குப்‌
பணம்‌ முதலானதாகவும்‌,
உயிர்ப்‌ பிராணியாகவும்‌ உதவும்‌ கடவுளுக்கே
உயிரைப்‌ படைப்பாயோ, உடைமையைக்‌ கொடாவிடில்‌? - காணிக்கை

- ல. பொன்னுசுவாமி

Start Downloading Your Apps