சமாதானம்‌ ஓதும்‌ ஏசுகிறிஸ்து

சமாதானம்‌ ஓதும்‌ ஏசுகிறிஸ்து
இவர்‌ தாம்‌, இவர்‌ தாம்‌, இவர்‌ தாம்‌.

சரணங்கள்‌

1. நம தாதி பிதாவின்‌ திருப்‌ பாலர்‌ இவர்‌,
அனுகூலர்‌ இவர்‌, மனுவேலர்‌ இவர்‌. - சமாதானம்‌

2. நேய கிருபையின்‌ ஒரு சேயர்‌ இவர்‌,
பரம ராயர்‌ இவர்‌, நம தாயர்‌ இவர்‌. - சமாதானம்‌

3. ஆதி நரர்‌ செய்த தீதறவே,
அருளானந்தமாய்‌, அடியார்‌ சொந்தமாய்‌. - சமாதானம்‌

4. ஆரணம்‌ பாடி, விண்ணோர்‌ ஆடவே,
அறிஞோர்‌ தேடவே, இடையோர்‌ கூடவே. - சமாதானம்‌

5. மெய்யாகவே மே சையாவுமே
நம்மை நாடினாரே, கிருபை கூறினாரே. - சமாதானம்‌

6. அருளானந்த மோட்ச வழி காட்டினாரே,
நிலை நாட்டினாரே, முடி சூட்டினாரே - சமாதானம்‌

- வேதநாயகம்‌ சாசுதிரியார்‌

Start Downloading Your Apps