சரணம்‌ சரணம்‌ அனந்தா -1

சரணம்‌, சரணம்‌, அனந்தா, சச்சிதானந்தா,
தாவீதின்‌ மைந்தா, ஓசன்னா! சரணபதந்தா.

சரணங்கள்‌

1. தேவசுதன்‌ பொந்தியுப்‌ பிலாத்தினிடமே,
சென்று பல பாடுபடவும்‌ தயவானார்‌.- சரணம்‌

2. தந்து செய்து பொந்தியுப்‌ பிலாத்து துரைதான்‌,
தற்பரனை விட்டுவிடத்‌ தன்னுள்‌ எண்ணினான்‌. - சரணம்

3. பரபாசோ டதிபதியைப்‌ பணிய நிறுத்தி,
பாதகனை யோ? இறையை யோ? விட, என்றான்‌. - சரணம்‌

4. ஜீவனுட அதிபதியைச்‌ சிலுவையில்‌ கொன்று,
திருடனையே விட்டுவிடத்‌ தீயவர்‌ கேட்டார்‌. - சரணம்‌

5. தண்ணீர்‌ தனை எடுத்துக்‌ கை கழுவியே,
தற்பரனைக்‌ கொல்வதற்கங்‌ கொப்புக்கொடுத்தான்‌. - சரணம்‌

6. கள்ளனையே விட்டு விட்டு யூதர்கட்காக,
காவலனைக்‌ குருசறைப்‌ பாவியும்‌ தீர்த்தான்‌. - சரணம்‌

- வேதநாயகம்‌ சாஸ்திரியார்‌

Start Downloading Your Apps