என்றும் கர்த்தாவுடன்

1. “என்றும் கர்த்தாவுடன்,
நான் கூடி வாழுவேன்,”
இவ்வாக்கினால் சாகா வரன்;
செத்தாலும் ஜீவிப்பேன்;
பற்றாசையால் உம்மை
விட்டே நான் அலைந்தேன்;
நாடோறும் வழி நடந்தே
விண் வீட்டைக் கிட்டுவேன்

2. அதோ சமீபமே,
பிதாவின் வீடுதான்!
என் ஞானக் கண்கள் காணுமே
மின்னும் பொன்னகர் வான்;
தூயோர் சுதந்தரம்,
நான் நேசிக்கும் நாடே;
என் ஆவி மேலெருசலேம்
சேரத் தவிக்குமே.

3. “கர்த்தாவுடன் என்றும்!”-
பிதாவே, இங்கும் நீர்
இவ்வாக்கை நிறைவேற்றவும்
சித்தம் கொண்டருள்வீர்,
என் பக்கம் தங்கிடின்,
தப்பாமலே நிற்பேன்;
கை தூக்கி என்னைத் தாங்கிடின்,
போராடி வெல்லுவேன்.

4. என் ஜீவன் போகும் நாள்
கிழியும் இத்திரை;
சாவை அழிப்பேன் சாவினால்
சாகா உயிர் பெற்றே;
என் தேவனைக் காண்பேன்,
நின்று களிப்புடன்
சிம்மாசனத்தின் முன் சொல்வேன்:-
“என்றும் கர்த்தாவுடன்”.

Start Downloading Your Apps