சருவேசுரா ஏழைப்பாவி என்‌

சருவேசுரா, ஏழைப்பாவி-என்‌ பேரிலே
தயவாய்‌ இரும்‌, சுவாமி

திரியேக பரதேவா, நெறி மேவும்‌ ஒரு யோவா,
சித்தம்‌ இரங்கிக்‌ காத்துக்‌ கிறிஸ்தின்‌ முகத்தைப்‌ பார்த்து. - சரு

சரணங்கள்‌

1. தந்தை நின்‌ ஒன்றான மைந்தன்‌ தனைக்‌ கொடுத்‌ தித்‌ தகைமை'
உலகை நேசித்தாய்‌;-நின்‌ சொந்தக்‌ கிருபை
தனைச்‌ சிந்தித்துணர மறை தொகுத்தெனக்‌ குபதேசித்தாய்‌;
இந்தப்‌ பெரிய நேசம்‌ புந்திக்‌ கொளியதாக்கும்‌;
எந்தப்‌ படியும்‌ என்‌ நிர்‌ பந்தம்‌ அனைத்தும்‌ போக்கும்‌! - சரு

2. தேவீர்க்‌ கேற்காத தீவினைகளைச்‌ செய்தும்‌ தண்டியாமல்‌
பொறுத்தீர்‌, நீர்‌ யாவும்‌ அறிந்திருந்தும்‌,
கோபித்துக்‌ கைவிடாதென்‌ நன்றி கேட்டை மறுத்தீர்‌,
ஜீவனே, உமக்குப்‌ பாவி பதில்‌ என்செய்வேன்‌?
மேவி அடி தொழாமல்‌ ஆவி எங்ஙனம்‌ உய்வேன்‌? - சரு

3. நெஞ்சில்‌ தெய்வ பயம்‌ கொஞ்சமேனும்‌ இல்லாமல்‌ நீதி
வழியைக்‌ கடந்தேன்‌;-கெட்ட வஞ்ச உலக வாழ்வை
மிஞ்சத்‌ தேடிப்‌, பேயின்‌ மனதுக்கேற்க
நடந்தேன்‌, பஞ்ச பாவி கூவிக்‌ கெஞ்சும்‌ ஜெபத்தைக்‌ கேளும்‌,
தஞ்சம்‌ என்றேன்‌; உனக்கே அஞ்சல்‌ என்றெனை ஆளும்‌.-சரு

- வேதநாயகம்‌ சாஸ்திரியார்‌

Start Downloading Your Apps