சுந்தரப்‌ பரம தேவ மைந்தன்‌

சுந்தரப்‌ பரம தேவ மைந்தன்‌ ஏசுக்‌ கிறிஸ்துவுக்குத்‌
தோத்திரம்‌, புகழ்ச்சி நித்திய கீர்த்தனம்‌ என்றும்‌!

அந்தரம்‌ புவியும்‌ தந்து, சொந்த ஜீவனையும்‌ ஈந்து
ஆற்றினார்‌; நமை ஒன்றாய்‌ கூட்டினார்‌; அருள்‌ முடி
சூட்டினார்‌; கிருபையால்‌ தேற்றினாரே, துதி - சுந்தரப்‌

சரணங்கள்‌

1. பாதகப்‌ பசாசால்‌ வந்த தீதெனும்‌ பவத்தால்‌ நொந்த
பாவிகளான நமை உசாவி மீட்டாரே;
வேத பிதாவுக்‌ குகந்த ஜாதியாகக்‌ கூட்டவந்த
மேசியாவைப்‌ பற்றும்‌ விசு வாச வீட்டாரே,
கோதணுகா நீதிபரன்‌ பாதமதின்‌ ஆதரவில்‌
கூடுங்கள்‌;-பவத்துயர்‌
போடுங்கள்‌;-ஜெயத்தைக்‌ கொண்‌
டாடுங்கள்‌, துதிசொல்லிப்‌ பாடுங்கள்‌, பாடுங்கள்‌ என்றும்‌
- சுந்தரப்‌

2. விண்ணிலுள்ள ஜோதிகளும்‌, எண்ணடங்காச்‌ சேனைகளும்‌
விந்தையாய்க்‌ கிறிஸ்துவைப்‌ பணிந்து போற்றவே,
மண்ணிலுள்ள ஜாதிகளும்‌ நண்ணும்‌ பல பொருள்களும்‌
வல்லபரன்‌ எனத்‌ துதி சொல்லி ஏத்தவே,
அண்ணலாம்‌ பிதாவுக்‌ கொரே புண்ணியகுமாரனைக்கொண்‌
டாடிட,-அவர்‌ பதம்‌
தேடிட,-வெகு திரள்‌
கூடி டத்துதிபுகழ்‌ பாடிடப்‌, பாடிட என்றும்‌ - சுந்தரப்‌

3. சத்தியத்‌ தரசர்களும்‌ வித்தகப்‌ பெரியார்களும்‌
சங்கத்தோர்‌ களுங்கிருபை தங்கி வாழவே,
எத்திசை மனிதர்களும்‌ பக்தர்‌ விசுவாசிகளும்‌
ஏக மிகுஞ்‌ சமாதான மாக வாழவே,
உத்தம போதகர்களும்‌ சத்யதிருச்‌ சபைகளும்‌,
உயர்ந்து-வாழ, தீயோன்‌
பயந்து-தாழ, மிக
நயந்து கிறிஸ்துவுக்கு ஜெயந்தான்‌, நயந்தான்‌ என்றும்‌ - சுந்தரப்‌

- மரியான்‌ உபதேசியார்‌

Start Downloading Your Apps