தெய்வ சமாதான

1. தெய்வ சமாதான
இன்ப நதியே
மா பிரவாகமான
வெள்ளம் போலவே
நிறைவாகப் பாயும்
ஓய்வில்லாமலும்;
ஓட ஆழமாயும்
நித்தம் பெருகும்.

அருள் நாதர் மீதில்
சார்ந்து சுகிப்பேன்,
நித்தம் இளைப்பாறல்
பெற்று வாழுவேன்.

2. கையின் நிழலாலே
என்னை மறைத்தார்;
சத்துரு பயத்தாலே
கலங்க விடார்.
சஞ்சலம் வராமல்
அங்கே காக்கிறார்;
ஏங்கித் தியங்காமல்
தங்கச் செய்கிறார்.

3. சூரிய ஜோதியாலே
நிழல் சாயையும்
காணப்பட்டாற்போலே,
துன்பம் துக்கமும்
ஒப்பில்லா பேரன்பாம்
சூரிய சாயையே
அதால் வாழ்நாள் எல்லாம்
சோரமாட்டேனே.

Start Downloading Your Apps