தேன்‌ இனிமையிலும்‌ இயேசுவின்

தேன்‌ இனிமையிலும்‌ ஏசுவின்‌ நாமம்‌
திவ்விய மதுர மாமே -அதைத்‌

தேடியே நாடி ஓடியே வருவாய்‌, தினமும்‌ நீ மனமே.

சரணங்கள்‌

1. காசினிதனிலே நேசமதாகக்‌
கஷ்டத்தை உத்தரித்தே,-பாவக்‌
கசடதை அறுத்துச்‌ சாபத்தைத்‌ தொலைத்தார்‌;
கண்டுணர்‌ நீ, மனமே. - தேன்‌

2. பாவியை மீட்கத்‌ தாவியே உயிரைத்‌
தாமே ஈந்தவராம்‌;-பின்னும்‌
நேமியாம்‌ கருணை நிலைவரமுண்டு;
நிதம்‌ துதி, என்‌ மனமே.-தேன்‌

3. காலையில்‌ பனிபோல்‌ மாயமாய்‌ உலகம்‌
உபாயமாய்‌ நீங்கிவிடும்‌; -என்றும்‌
கர்த்தரின்‌ பாதம்‌ நிச்சயம்‌ நம்பு
கருத்தாய்‌ நீ, மனமே. -தேன்‌

4. துன்பத்தில்‌ இன்பம்‌ தொல்லையில்‌ நல்ல
துணைவராம்‌ நேச ரிடம்‌; - நீயும்‌
அன்பதாய்ச்‌ சேர்த்தால்‌ அணைத்துனைக்‌ காப்பார்‌,
ஆசைகொள்‌ நீ, மனமே. -தேன்‌

5. பூலோகத்தாரும்‌ மேலோகத்தாரும்‌
புகழ்ந்து போற்று நாமம்‌;-அதைப்‌
பூண்டுகொண்‌ டால்தான்‌ பொன்னகர்‌ வாழ்வில்‌
புகுவாய்‌ நீ, மனமே. - தேன்‌

- அருள்திரு. ஆ. சவறிறுத்து

Start Downloading Your Apps